♩ ♬ காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் – நீ
என் கண்ணிரண்டைக் கேட்கிறாய் ♬ ♩
பட video cassete ஐ எடுத்துப் போடும்போது நினைவுக்கு வந்த வரிகள் [இந்தப் பாடல் இந்தப் படப் பாடல் அல்ல]. படம் முழுக்க அந்த இசையின் தழுவல் இருப்பதாக நான் உணர்கிறேன்.
இந்தப் படத்திற்கு “சில்லென்று ஒரு காதல்” என்று பெயர் வைத்திருக்கலாம் போலும். மிக மிக மென்மையாக ஒரு முக்கோண காதல் கதை. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், எந்த காது வெடிக்கும் இசையோ பாடல்களோ இல்லாமல், வெகு மென்மையான இசையில் படம்.
ஒரு சண்டை கூட படத்தில் இல்லை.
படத்தை பார்த்து முடித்தும் மனதில் ஏதோ ஒரு உணர்ச்சி உருண்டுகொண்டிருந்தது.
ஏற்கனவே அறிந்த கதை தான், இருந்தாலும் பார்க்கலாம். அவ்வளவு இரசிக்கத்தக்கதாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். காதலிப்பவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஜோடியாய் போய்ப் பார்க்கலாம்.
பாடல்களும் நன்றாகவே இருக்கின்றன. இசையமைப்பாளருக்கு ஒர் கைதட்டல்.
திரை அரங்கில் பார்த்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
______
CAPital
சில்லென்று ஒரு காதல். நானும் ஏதோ ஒரு மென்மையான காதல் கதையாய் இருக்கும் என்று video cassette ஐப் போட்டு பார்த்தன். கலியாணம் கட்டியவர்கள் தான் பார்க்கவேண்டிய படம் போல கிடக்குது.
என்னென்றாலும், ஜோதிகா, பூமிகாவுடன் ஒரு நாளை செலவழி என்று சொல்லி சூர்யாவிடம் விட்டுட்டு போக அவர் அதற்கு பெரிதாக ஒன்றும் எதிர்ப்புக் காட்டாமல் ஆமோதிப்பது என் பார்வைக்கு முற்றுமுழுதாக பிழையாகத் தெரிகிறது.
பூமிகா கேட்டு, கடைசி ஆசை (அ) ஜோதிகாவிடம் கெஞ்சி சூர்வை சம்மதிக்க வைச்சு “ஒரு நாள்” ஐ சிலவழிக்க ஒத்துக்கொண்டிருந்தால் சூர்யா நல்லவராக பட்டிருப்பார். பூமிகாவுக்கு எதாவது பெரிய வருத்தம் இருப்பதாகவும் காட்டி இருக்கலாம்.
மனைவி ஏதோ கேட்கிறாள் என்றால், இவரும் ஆமாம் என்று கழத்தில் இறங்குகிறார். நியாயமாக, இவர் ஜோதிகாவை தடுத்து நிறுத்தி இதற்கு ஒத்துக்கொண்டிருக்கக் கூடாது. இவரும் சம்மதித்து, பூமிகாவுடன் தனியாக இருக்க, அவள் நல்லவளாக இருந்ததால் ஏதும் நடக்கவில்லை. இதில் பூமிகா தான் நல்லவளாக தெரிகிறார்.
சூர்யாவிற்கு தப்பு செய்ய மனைவி சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்து, பூமிகா நல்லவராக இருந்ததால் தப்பு ஏதும் நடக்கவில்லை என்று தான் படத்தில் விளங்குகிறது.
_____
CAPital